Friday, August 31, 2007

கவிதை மாதிரி


காதல் சாலையில் கொஞ்சம்
கவிதை மழையில் நனைந்த
காற்று வாங்கலாம் என்று
காலாற நடந்து போனேன்.

காற்றடிக்க வில்லை வெறும்
கானல் மட்டுமே தெரியுமென்று
களைப்புறு முன்னே தெரிந்திருந்தால்
கால்வைத்திருக்கவே மாட்டேன் இந்தக்
காளவாயில்.

4 comments:

கூமுட்டை said...

என்னாச்சு தல, ஒரே பீலிங்ஸா இருக்கு.

யோசிப்பவர் said...

கூமுட்டை,
இதெல்லாம் பழைய பீலீங்ஸ். ஸோ, டோன்ட் ஒரி!!;-)

நளாயினி said...

கவிதை மாதிரி இல்லை கவிதை தான். உணர்வுகள் தானே கவிதை. எழுதுங்கள் தொடர்ந்து.

யோசிப்பவர் said...

ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் இதெல்லாம் கவிதை இல்லை. கவிதை மாதிரிதான்!!;-)