Monday, November 26, 2007

கவிதை மாதிரி...

உன்னைப் பற்றி நினைப்பதே
முட்டாள்த் தனம், புரிகிறது
ஆனாலும் எனக்கு நினைப்பதற்கு
ஏதாவ தொன்று தேவையிருக்கிறதே!
என்ன செய்யச் சொல்கிறாய்?

Sunday, November 25, 2007

தினமணிக் கதிரில் நிலாரசிகன்

இன்றைக்கு தினமணிக் கதிரில், நண்பர் நிலாரசிகனின் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), அவருடைய வலைபதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள். நிலாரசிகனின் எழுத்துக்கள் அச்சுப் பிரசுரம் ஆவது இது முதல் முறை அல்லவென்றாலும், கதை என்ற கூறில், இதுவே அவரின் முதல் அச்சுப் பிரசுரம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!


பி.கு.: ஏனோ தினமணியின் இணைய தளத்தில் அந்தப் பக்கம் இல்லை.