Friday, August 31, 2007

கவிதை மாதிரி


காதல் சாலையில் கொஞ்சம்
கவிதை மழையில் நனைந்த
காற்று வாங்கலாம் என்று
காலாற நடந்து போனேன்.

காற்றடிக்க வில்லை வெறும்
கானல் மட்டுமே தெரியுமென்று
களைப்புறு முன்னே தெரிந்திருந்தால்
கால்வைத்திருக்கவே மாட்டேன் இந்தக்
காளவாயில்.