Monday, July 9, 2018

MOBILE PRIVACY POLICY
POWERED BY DOCRACY.COM
1 of 4
MOBILE PRIVACY POLICY
PRIVACY POLICY MODEL FOR MOBILE APPLICATIONS
This privacy policy governs your use of the software application Share Expense (“Application”) for
mobile devices that was created by Yosippavar. The Application  organizes  expenses of any group event
What information does the Application obtain and how is it used?
User Provided Information
The Application obtains the information you provide when you download and register the
Application. Registration with us is optional. However, please keep in mind that you may not be
able to use some of the features offered by the Application unless you register with us.
When you register with us and use the Application, you generally provide (a) your name, email
address, age, user name, password and other registration information; (b) transaction-related
information, such as when you make purchases, respond to any offers, or download or use
applications from us; (c) information you provide us when you contact us for help; (d) credit card
information for purchase and use of the Application, and; (e) information you enter into our system
when using the Application, such as contact information and project management information.
We may also use the information you provided us to contact your from time to time to provide
you with important information, required notices and marketing promotions.
Automatically Collected Information
In addition, the Application may collect certain information automatically, including, but not
limited to, the type of mobile device you use, your mobile devices unique device ID, the IP
address of your mobile device, your mobile operating system, the type of mobile Internet browsers
you use, and information about the way you use the Application.
Does the Application collect precise real time location information of the device?
This Application does not collect precise information about the location of your mobile device. MOBILE PRIVACY POLICY
POWERED BY DOCRACY.COM
2 of 4
Do third parties see and/or have access to information obtained by the
Application?
Only aggregated, anonymized data is periodically transmitted to external services to help us
improve the Application and our service. We will share your information with third parties only in
the ways that are described in this privacy statement.
We may disclose User Provided and Automatically Collected Information:
as required by law, such as to comply with a subpoena, or similar legal process;
when we believe in good faith that disclosure is necessary to protect our rights, protect your safety or the safety of others, investigate
fraud, or respond to a government request;
with our trusted services providers who work on our behalf, do not have an independent use of the information we disclose to them,
and have agreed to adhere to the rules set forth in this privacy statement.
if Yosippavar is involved in a merger, acquisition, or sale of all or a portion of its assets, you will be notified via email and/or
a prominent notice on our Web site of any change in ownership or uses of this information, as well as any choices you may have
regarding this information.
What are my opt-out rights?
You can stop all collection of information by the Application easily by uninstalling the Application.
You may use the standard uninstall processes as may be available as part of your mobile device or
via the mobile application marketplace or network. You can also request to opt-out via email, at
yosippavar@gmail.com.
Data Retention Policy, Managing Your Information
We will retain User Provided data for as long as you use the Application and for a reasonable time
thereafter. We will retain Automatically Collected information for up to 24 months and thereafter
may store it in aggregate. If you’d like us to delete User Provided Data that you have provided via
the Application, please contact us at yosippavar@gmail.comand we will respond in a reasonable
time. Please note that some or all of the User Provided Data may be required in order for the
Application to function properly.
Children
We do not use the Application to knowingly solicit data from or market to children under the age
of 13. If a parent or guardian becomes aware that his or her child has provided us with informationMOBILE PRIVACY POLICY
POWERED BY DOCRACY.COM
3 of 4
without their consent, he or she should contact us at yosippavar@gmail.com. We will delete such
information from our files within a reasonable time.
Security
We are concerned about safeguarding the confidentiality of your information. We provide physical,
electronic, and procedural safeguards to protect information we process and maintain. For example,
we limit access to this information to authorized employees and contractors who need to know that
information in order to operate, develop or improve our Application. Please be aware that,
although we endeavor provide reasonable security for information we process and maintain, no
security system can prevent all potential security breaches.
Changes
This Privacy Policy may be updated from time to time for any reason. We will notify you of any
changes to our Privacy Policy by posting the new Privacy Policy http://sinthanaikal.blogspot.in/
 and informing you via email or text message. You are advised to consult this Privacy Policy
regularly for any changes, as continued use is deemed approval of all changes. You can check the
history of this policy by http://sinthanaikal.blogspot.in/.
Your Consent
By using the Application, you are consenting to our processing of your information as set forth in
this Privacy Policy now and as amended by us. "Processing,” means using cookies on a
computer/hand held device or using or touching information in any way, including, but not
limited to, collecting, storing, deleting, using, combining and disclosing information, all of which
activities will take place in the India. If you reside outside the India your information will be
transferred, processed and stored there under India privacy standards.
Contact us
If you have any questions regarding privacy while using the Application, or have questions about
our practices, please contact us via email at yosippavar@gmail.com.MOBILE PRIVACY POLICY
POWERED BY DOCRACY.COM
4 of 4

Thursday, June 4, 2015

PRIVACY POLICY MODEL FOR MOBILE APPLICATIONS

This privacy policy governs your use of the software application Sollanguli சொல்லாங்குழி (“Application”) for mobile devices that was created by Yosippavar. The Application is a Tamil word play game.

What information does the Application obtain and how is it used?

User Provided Information
The Application obtains the information you provide when you download and register the Application. Registration with us is optional. However, please keep in mind that you may not be able to use some of the features offered by the Application unless you register with us.
When you register with us and use the Application, you generally provide (a) your name, email address, age, user name, password and other registration information; (b) transaction-related information, such as when you make purchases, respond to any offers, or download or use applications from us; (c) information you provide us when you contact us for help; (d) credit card information for purchase and use of the Application, and; (e) information you enter into our system when using the Application, such as contact information and project management information.
We may also use the information you provided us to contact your from time to time to provide you with important information, required notices and marketing promotions.
Automatically Collected Information
In addition, the Application may collect certain information automatically, including, but not limited to, the type of mobile device you use, your mobile devices unique device ID, the IP address of your mobile device, your mobile operating system, the type of mobile Internet browsers you use, and information about the way you use the Application.

Does the Application collect precise real time location information of the device?

When you visit the mobile application, we may use GPS technology (or other similar technology) to determine your current location in order to determine the city you are located within and display a location map with relevant advertisements. We will not share your current location with other users or partners.
If you do not want us to use your location for the purposes set forth above, you should turn off the location services for the mobile application located in your account settings or in your mobile phone settings and/or within the mobile application.

Do third parties see and/or have access to information obtained by the Application?

Yes. We will share your information with third parties only in the ways that are described in this privacy statement.
We may disclose User Provided and Automatically Collected Information:
  • as required by law, such as to comply with a subpoena, or similar legal process;
  • when we believe in good faith that disclosure is necessary to protect our rights, protect your safety or the safety of others, investigate fraud, or respond to a government request;
  • with our trusted services providers who work on our behalf, do not have an independent use of the information we disclose to them, and have agreed to adhere to the rules set forth in this privacy statement.
  • if Yosippavar is involved in a merger, acquisition, or sale of all or a portion of its assets, you will be notified via email and/or a prominent notice on our Web site of any change in ownership or uses of this information, as well as any choices you may have regarding this information.

What are my opt-out rights?

You can stop all collection of information by the Application easily by uninstalling the Application. You may use the standard uninstall processes as may be available as part of your mobile device or via the mobile application marketplace or network. You can also request to opt-out via email, at yosippavar@gmail.com.

Data Retention Policy, Managing Your Information

We will retain User Provided data for as long as you use the Application and for a reasonable time thereafter. We will retain Automatically Collected information for up to 24 months and thereafter may store it in aggregate. If you’d like us to delete User Provided Data that you have provided via the Application, please contact us at yosippavar@gmail.comand we will respond in a reasonable time. Please note that some or all of the User Provided Data may be required in order for the Application to function properly.

Children

We do not use the Application to knowingly solicit data from or market to children under the age of 13. If a parent or guardian becomes aware that his or her child has provided us with information without their consent, he or she should contact us at yosippavar@gmail.com. We will delete such information from our files within a reasonable time.

Security

We are concerned about safeguarding the confidentiality of your information. We provide physical, electronic, and procedural safeguards to protect information we process and maintain. For example, we limit access to this information to authorized employees and contractors who need to know that information in order to operate, develop or improve our Application. Please be aware that, although we endeavor provide reasonable security for information we process and maintain, no security system can prevent all potential security breaches.

Changes

This Privacy Policy may be updated from time to time for any reason. We will notify you of any changes to our Privacy Policy by posting the new Privacy Policy http://sinthanaikal.blogspot.in/ and informing you via email. You are advised to consult this Privacy Policy regularly for any changes, as continued use is deemed approval of all changes. You can check the history of this policy by http://sinthanaikal.blogspot.in/.

Your Consent

By using the Application, you are consenting to our processing of your information as set forth in this Privacy Policy now and as amended by us. "Processing,” means using cookies on a computer/hand held device or using or touching information in any way, including, but not limited to, collecting, storing, deleting, using, combining and disclosing information, all of which activities will take place in the India. If you reside outside the India your information will be transferred, processed and stored there under India privacy standards.

Contact us

If you have any questions regarding privacy while using the Application, or have questions about our practices, please contact us via email at yosippavar@gmail.com.

Friday, January 23, 2015

MOBILE PRIVACY POLICY
POWERED BY DOCRACY.COM
1 of 4
MOBILE PRIVACY POLICY
PRIVACY POLICY MODEL FOR MOBILE APPLICATIONS
This privacy policy governs your use of the software application What A சினிமா? (“Application”) for
mobile devices that was created by Yosippavar. The Application is a Tamil Word Play Game
with Tamil Movie names
What information does the Application obtain and how is it used?
User Provided Information
The Application obtains the information you provide when you download and register the
Application. Registration with us is optional. However, please keep in mind that you may not be
able to use some of the features offered by the Application unless you register with us.
When you register with us and use the Application, you generally provide (a) your name, email
address, age, user name, password and other registration information; (b) transaction-related
information, such as when you make purchases, respond to any offers, or download or use
applications from us; (c) information you provide us when you contact us for help; (d) credit card
information for purchase and use of the Application, and; (e) information you enter into our system
when using the Application, such as contact information and project management information.
We may also use the information you provided us to contact your from time to time to provide
you with important information, required notices and marketing promotions.
Automatically Collected Information
In addition, the Application may collect certain information automatically, including, but not
limited to, the type of mobile device you use, your mobile devices unique device ID, the IP
address of your mobile device, your mobile operating system, the type of mobile Internet browsers
you use, and information about the way you use the Application.
Does the Application collect precise real time location information of the device?
This Application does not collect precise information about the location of your mobile device. MOBILE PRIVACY POLICY
POWERED BY DOCRACY.COM
2 of 4
Do third parties see and/or have access to information obtained by the
Application?
Only aggregated, anonymized data is periodically transmitted to external services to help us
improve the Application and our service. We will share your information with third parties only in
the ways that are described in this privacy statement.
We may disclose User Provided and Automatically Collected Information:
as required by law, such as to comply with a subpoena, or similar legal process;
when we believe in good faith that disclosure is necessary to protect our rights, protect your safety or the safety of others, investigate
fraud, or respond to a government request;
with our trusted services providers who work on our behalf, do not have an independent use of the information we disclose to them,
and have agreed to adhere to the rules set forth in this privacy statement.
if Yosippaamivar is involved in a merger, acquisition, or sale of all or a portion of its assets, you will be notified via email and/or
a prominent notice on our Web site of any change in ownership or uses of this information, as well as any choices you may have
regarding this information.
What are my opt-out rights?
You can stop all collection of information by the Application easily by uninstalling the Application.
You may use the standard uninstall processes as may be available as part of your mobile device or
via the mobile application marketplace or network. You can also request to opt-out via email, at
yosippavar@gmail.com.
Data Retention Policy, Managing Your Information
We will retain User Provided data for as long as you use the Application and for a reasonable time
thereafter. We will retain Automatically Collected information for up to 24 months and thereafter
may store it in aggregate. If you’d like us to delete User Provided Data that you have provided via
the Application, please contact us at yosippavar@gmail.comand we will respond in a reasonable
time. Please note that some or all of the User Provided Data may be required in order for the
Application to function properly.
Children
We do not use the Application to knowingly solicit data from or market to children under the age
of 13. If a parent or guardian becomes aware that his or her child has provided us with informationMOBILE PRIVACY POLICY
POWERED BY DOCRACY.COM
3 of 4
without their consent, he or she should contact us at yosippavar@gmail.com. We will delete such
information from our files within a reasonable time.
Security
We are concerned about safeguarding the confidentiality of your information. We provide physical,
electronic, and procedural safeguards to protect information we process and maintain. For example,
we limit access to this information to authorized employees and contractors who need to know that
information in order to operate, develop or improve our Application. Please be aware that,
although we endeavor provide reasonable security for information we process and maintain, no
security system can prevent all potential security breaches.
Changes
This Privacy Policy may be updated from time to time for any reason. We will notify you of any
changes to our Privacy Policy by posting the new Privacy Policy http://sinthanaikal.blogspot.in/
 and informing you via email or text message. You are advised to consult this Privacy Policy
regularly for any changes, as continued use is deemed approval of all changes. You can check the
history of this policy by http://sinthanaikal.blogspot.in/.
Your Consent
By using the Application, you are consenting to our processing of your information as set forth in
this Privacy Policy now and as amended by us. "Processing,” means using cookies on a
computer/hand held device or using or touching information in any way, including, but not
limited to, collecting, storing, deleting, using, combining and disclosing information, all of which
activities will take place in the India. If you reside outside the India your information will be
transferred, processed and stored there under India privacy standards.
Contact us
If you have any questions regarding privacy while using the Application, or have questions about
our practices, please contact us via email at yosippavar@gmail.com.MOBILE PRIVACY POLICY
POWERED BY DOCRACY.COM
4 of 4

Thursday, January 28, 2010

ஆன்லைனில் எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல்

டிஸ்கி : இதுவும் ஒரு சுய விளம்பரப் பதிவு!!!

எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகியிருப்பது உங்களனைவருக்கும் தெரியும். இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? எங்கே கிடைக்கும்? என்று பல கோடி(?!?) பேர் கேட்கிறார்கள். அதற்காகவே இந்தப் பதிவு.

தபால் மூலம் வாங்க, ’TRISAKTHI PUBLICATIONS’ என்ற பெயருக்கு புத்தக விலை ரூ.70+தபால் செலவு ரூ.25க்கு Demand Draft எடுத்து, புத்தகப் பெயரையும் குறிப்பிட்டு,

Chief Editor
Trisakthi Publications
Giriguja Enclave
56/21, First Avenue, Shastri Nagar
Adyar
Chennai 600 020
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நேரடியாக வாங்க, மேற்கண்ட முகவரிக்கு வருகை தந்தால், திரிசக்தி பதிப்பகத்தாரின் அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும்(என்னுடையதும் இதில் அடங்கும்!).

ஆன்லைனில் கூட வாங்கலாம். ஆன்லைனில் புத்தகத்தை இங்கு வாங்குங்கள் ->
http://ezeebookshop.com/eshop/product_info.php?cPath=14_17&products_id=85

பி.கு.:- இந்தப் பதிவு எனது எல்லா வலைப்பூக்களிலும் வெளியாகும். அதனால் திரட்டிகளில் மறுபடி மறுபடி இந்தத் தலைப்பை காண நேர்ந்தால், அது உங்கள் தலைவிதி!!!;-)

Tuesday, October 6, 2009

உ.போ.ஒ. எவ்ளோ பெர்யயய ஓட்டட?

ரொம்ப லேட்தான் என்றாலும், நேற்றுதான் இந்தப் படம் பார்த்தேன். அதனால் இன்று இந்த போஸ்ட். படம் பற்றி மற்றவர்கள் எழுதிய எதையும் நான் படிக்கவில்லை. அதனால் இந்தக் கேள்வியை யாராவது கேட்டாங்களான்னு தெரியலை?

கமல் இந்தப் படத்துல செய்றது/யூஸ் பண்றது மொத்தம் மூன்று பாம் - போலீஸ் ஸ்டேஷன், ஜீப், கடைசியில் தன் சாதனங்களை அழிப்பதற்கு சின்ன சைஸ் ஒன்று. ஓகே. மற்ற எந்த இடத்திலும் பாம் வைக்கவில்லை என்று மோகன்லாலிடம் கடைசியில் சொல்கிறார். வேறு எந்த இடத்திலும் பாம் வைக்கவில்லையென்றால், எதற்காக ஆரம்பத்தில் கமல், பஸ், ஷாப்பிங் மால், ட்ரெய்ன் ஆகியவற்றில் பைகளை விடுவதை விலாவரியாக காட்டுகிறார்கள். போலீஸை ஏமாற்றுவதற்கா? அவங்களுக்குத்தான் பாம் வைக்கிறதே தெரியாதே?! லாஜிக் ப்ளீஸ்!

இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு பின்னூட்டத்தில் சொல்லவும்.

பி.கு.:- அனேகமா ஒரு பின்னூட்டம் கூட வராது என்று நம்புகிறேன்!!!

Tuesday, June 30, 2009

கனவும் கற்று மற

தடதடதட... தடதட.

கதவு தட்டப்பட்டது. தலைமாட்டிலிருந்த என் வாட்சை இழுத்து, தூக்க கண்களுடன் மணி பார்த்தேன். 3.40.

'இந்த நேரத்தில் யார்?'

மெதுவாக எழுந்து கதவைத் திறந்தேன். வந்திருந்தவர் குற்றத் தடுப்பு உயரதிகாரி போல் உடையணிந்திருந்தார்.

"என்ன?"

"மிஸ்டர் விசி, அடையாள எண் 12034557..?"

"நான் தான்."

"அரசாங்க விஞ்ஞானி இல்லையா? அதனால்தான் முதல் வரிசை அடையாள எண் கிடைத்திருக்கிறது" என்றபடி அவர் பாட்டுக்கு கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் உள்ளே நுழைந்து, என்னுடைய ஃபோல்டபுள் குஷன் சோஃபாவை ஆக்கிரமித்தார்.

"எக்ஸ்கியூஸ் மீ. நீங்கள்...?"

"பார்த்தால் தெரியவில்லையா? பை தவே மிஸ்டர் விசி, உங்களை கைது செய்கிறேன்?"

"வாட்? எதுக்கு?"

"நீங்கள் அரசாங்கத்துக்குத் தெரியாமல், ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டதிற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன."

"அப்படியொன்றும்.."

"பிராஜக்ட் ரஜா", நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். "எங்களுக்கு எல்லாம் தெரியும்." என்று மெல்லிய குரலில் கூறினார்.

'தெரிந்து விட்டது. என்ன செய்யலாம்?'

"அது ஒன்றும் அரசாங்க விரோத அராய்ச்சி அல்ல. அது ..."

"பிறகு ஏன் அரசாங்கத்துக்கு அறிவிக்காமல் ரகசியமாக ஆராய்ச்சி செய்கிறீர்கள்? விசி, இந்த தேசத்தில் நீங்கள் ஒருவர் மட்டும்தான் விஞ்ஞானியா என்ன? உங்களைப் போன்ற பல விஞ்ஞானிகள் கண்டுபிடித்த, உங்களுக்கே தெரியாத பல நவீன டெக்னாலஜிகள் எங்களிடம் உள்ளன. அப்படியில்லையென்றால் இந்த தேசத்தில் குற்றத்தடுப்பு சாத்தியம் இல்லை."

எனக்கு வியர்த்தது. 'விஷயம் முழுமையாக தெரிந்து விட்டது. இப்பொழுது கைது செய்வதாக கூறினாலும் அங்கே மரணம்தான் காத்திருக்கிறது. நான் ஒன்றும் ஏமாந்தவனல்ல. கைதாகி விட்டால் தீர்ந்தது.'

என் கால்கள் லேசாக வாசல் நோக்கி திரும்பியதுமே, அவர் கைகளில் அடாமிக் கன் முளைத்தது.

"நோ அதர் தாட்ஸ் விசி." குரலில் கேலியே இருந்தது. அவர் கைகளுக்கும் எனக்கும் பத்தடி இருந்தது.

அடுத்த நொடியே என்னுடைய கைகளில் அதே கன். "ஸாரி மிஸ்டர். நான் இப்பொழுது போக வேண்டும்.", கன் ட்ரிக்கரை அழுத்த்த்தியே விட்டேன்.

'பவ்' என்ற மிக மெல்லிய ஒலி. அவர் மார்புக்கு மிக அருகே நிறைய ரத்தம்.
கொ...ன்..று....

சட்டென்று ஏற்பட்ட உணர்வில், விழித்துப் பார்த்த நான் தலைமாட்டிலிருந்த வாட்சை எடுத்துப் பார்த்தேன். 3.35

முகமெல்லாம் வியர்த்து இருந்தது. 'எவ்வளவு பயங்கர கனவு? ரகசிய ஆராய்ச்சி..? நான் அப்படியேதும் செய்யவில்லையே? அதற்கு ஒரு பெயர் வேறே. ரஜா. இந்த மாதிரி வார்த்தையை எப்பொழுதாவது கேட்டிருக்கிறேனா? எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கொலை வேறு!! அதிகாரியின் கையிலிருந்த கன் எப்படி என் கைக்கு வந்தது? ஏன் இப்படியொரு கனவு வந்தது?'

தடதடதட... தடதட.

கதவு தட்டப்பட்டது.

எனக்கு பயம் கொடுத்தது. 'ஏதாவது பழைய ஆங்கிலப் படங்கள் போல், உண்மையிலேயே கனவில் வந்தது நிஜத்திலும் நடக்குமோ? ஆனால், நான் தான் அப்படி எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லையே.'

மெதுவாக சென்று கதவை திறந்தேன். வந்திருந்தவர் சாதாரணமாக நைட் டிரஸ்தான் போட்டிருந்தார். கனவில் வந்த முகம் வேறு மாதிரி இருந்ததாக ஞாபகம்.

"மிஸ்டர் விசி, அடையாள எண் 12034557..?"

"நான் தான்."

"தூக்கத்தில் எழுப்பியதற்கு மன்னிக்கவும். உங்களை கைது செய்ய வேண்டியிருக்கிறது."

"வாட்? எதுக்கு?" நடுங்கினேன்.

அவர் மெதுவாக புன்னகைத்து, "மிஸ்டர் விசி. நீங்களே ஒரு அரசாங்க விஞ்ஞானி. கனவுகளைக் கூட நாங்கள் ஸ்கான் செய்வோம் என்று உங்களுக்குத் தெரியாதா? உங்கள் கனவில் ஒரு குற்றப்பிரிவு அதிகாரியை கொன்றதற்காகவும், அரசுக்கெதிரான ரகசிய ஆராய்ச்சி பற்றிய எண்ணங்கள் மனதில் முளை விட்டதற்கும், உங்களை கைது செய்கிறேன்."

“ஸீ. நான் அந்த மாதிரி ரகசிய ஆராய்ச்சி எதுவும் செய்யலை. அது ஒரு...”

“இது வரை செய்யவில்லை. இனிமேல் செய்ய முனையலாம். உங்கள் கனவுகள் உங்களை வழிநடத்தலாம். எண்பது சதவீதம் குற்றங்களும், கண்டுபிடிப்புகளும் கனவுகளிலிருந்தே பிறக்கின்றன. அதற்காகத்தான் இந்த கனவு ஸ்கானிங் டெக்னாலஜியை எங்கள் குற்றத் தடுப்புப் பிரிவு தத்தெடுத்துக் கொண்டது.”

எனக்கு வியர்த்தது. என் கருவிழிகள் வாசலுக்கு ஒருமுறை ஓட, அவர் கைகளில் அந்த அடாமிக் கன் முளைத்தது.

“பைத்தியக்காரத்தனமாக ஏதும் செய்யாதீர்கள் மிஸ்டர் விசி.”. அந்தத் துப்பாக்கி என் தலையை தீவிரமாக முறைத்தது.

அவர் என்னை நோக்கி ஓரடி எடுத்து வைக்க, தரையில் புரண்டு கொண்டிருந்த படுக்கையை சுவரோடு கட்டுவதற்கு உபயோகிக்கும் ஸ்ட்ராப், அவர் ஷூவுக்கு மேலான சாக்ஸைப் பிடித்து இழுக்க, என்னை நோக்கி முன்னே சரிய, அவர் கையிலிருந்த கன்...

என்னுடைய கைகளில் அதே கன்.

தடதடதட... தடதட.




Thursday, June 25, 2009

தொடர முடிந்த தொடர் விளையாட்டு

வலையுலகில் இதுவரை நடந்த பல தொடர் விளையாட்டுக்களில் எனக்குள்ள சங்கடம் என்ன என்பதை முன்பே இங்கே விளக்கியுள்ளேன். இந்த 32 கேள்வி பதில் தொடருக்கு சினேகிதி சகாராத் தென்றல் அழைத்தபொழுதும் அதைத்தான் சொன்னேன். ஆனாலும் இப்பொழுது 32 கேள்விகளுக்கு ஏன் பதில் எழுதியிருக்கிறேன் என்று 15வது கேள்விக்கான பதிலைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
முதன் முதலாக ஆரம்பித்த வலைப்பதிவு யோசிங்க. அதற்காக யோசிப்பவர் என்று வைத்துக் கொண்டேன். நானே வைத்துக் கொண்ட பெயர் இது. பிடிக்காமலா வைத்துக் கொண்டிருக்கிறேன்?!

2) கடைசியா அழுதது எப்போது?
இந்தக் கேள்விக்கு பதில் படிக்குமுன் இங்கே சென்று 1-அவுக்கான பதிலை படித்து விடவும்.
கடைசியா அழுதது பல மாதங்களுக்கு முன்பு. துக்கம் தொண்டையைத் தாண்டி கண்களை அடைய விடுவதில்லை!!;-)

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
தற்பொழுது நான் கையால் எங்கேயெல்லாம் எழுதுகிறேன் என்று யோசித்துப் பார்த்தால், கடன் அட்டை மூலமாக பொருட்கள் வாங்கப் போடும் கையெழுத்து, சில அலுவலக கட்டிடங்களுக்குள் நுழைய எண்ட்ரி கையெழுத்து. அவ்வளவுதான். அவையும் ஆங்கிலத்தில்தான். தமிழில் பேனா பிடித்து எழுதுவதற்கு இப்பொழுதெல்லாம் பயமாயிருக்கிறது. படிக்கும் காலத்தில் என்று பார்த்தால், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று எந்த மொழியாயிருந்தாலும் பாரபட்சமில்லாமல், என் கையெழுத்து ஆகக் கண்றாவியாக இருக்கும். பிடிக்குமா?!

4) பிடித்த மதிய உணவு?
காரமாக பொரித்த அசைவ உணவுகள். அதற்காக தினமும் அவற்றை சாப்பிட முடியாது. எனக்கு வெரைட்டி இருந்தாக வேண்டும்.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
அந்த வேறு யாராவது யார் என்று தெரிந்தால்தானே சொல்ல முடியும். அந்த வேறு யாராவதாய் இருக்கும்பொழுது, என்னென்ன விருப்பங்கள்/வெறுப்புகள் இருக்குமோ!?

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
எது அருகில் இருக்கிறதோ அது. கடலருகில்தான் பிறந்ததும் வளர்ந்ததும். நீச்சல் பழகியதோ ஆற்றில். வருடாவருடம் குற்றாலத்து சீஸன் விசிட்டை தவற விட்டதில்லை. மொத்தத்தில் தண்ணீர் இருந்தால் போதும். எது என்பது முக்கியமில்லை!!

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முகம். முக்கியமாக கண்கள்.

8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?
பிடித்தது - எதிலும் எப்பொழுதும் Perfectionistஆக இருக்க விரும்பும் நினைப்பு.
பிடிக்காதது - நிஜத்தில் அப்படி இருக்க முடியாதது.

9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
இந்தக் கேள்வியை சாய்ஸில் விடுகிறேன்.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
முன்பு வருந்தியிருக்கிறேன். இப்பொழுது வருந்துவதில்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
இதெல்லாம் என்னக் கேள்வி, அந்தரங்கத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டு?!:-(

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
என் குழந்தையின் சிணுங்கல்களை.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இப்படி இஷ்டத்துக்கெல்லாம் கேட்கக் கூடாது. யாருப்பா கொஸ்டின் செட் பண்ணினது?

14) பிடித்த மணம்?
எல்லா நாற்றங்களும். கூவம் கூட! ஏனென்றால் இதைத்(நுகர்வதை) தவிர்க்க முடியாது.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
பிடித்த விஷயம் - நான் அழைத்தவுடன் என்னைப் போல பந்தா எதுவும் செய்யாமல் உடனே ஒத்துக் கொண்டார்.
அழைக்கக் காரணம் - அவர் ஒருவர்தான் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பொதுவாக கவிதைகள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஆனால் என்னையும் தங்களது சில கவிதைகளால் படிக்கத் தூண்டியவர்களில் சகாராத் தென்றலும் ஒருவர். குறிப்பிட்டு இந்தப் பதிவு/கவிதை பிடிக்கும் என்று சொல்லத் தோன்றவில்லை. ஆனால் இவர் இன்னும் வெவ்வேறு தளங்களிலும் கவிதை எழுதினால் நன்றாக இருக்கும் என்று என்னை நினைக்க வைத்தவர்.

17) பிடித்த விளையாட்டு?
பொதுவில் சொல்லக் கூடாது.

18) கண்ணாடி அணிபவரா?
ஒரு காலத்தில்.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
நாடகத்தனமில்லாத நடிப்பு கொண்ட எல்லாவகையான திரைப்படங்களும். கதையம்சத்தில் நாடகத்தனம் இருக்கலாம்.

20) கடைசியாகப் பார்த்த படம்?
காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி.(Gods must be crazy)

21) பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம். பாக்கெட்களில் எதுவுமில்லாமல், நம்மை நம்பி கூடவும் யாருமில்லாவிட்டால், மழையில் நனைந்து கொண்டு வண்டியோட்ட ரொம்பப் பிடிக்கும்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
எந்தப் புத்தகம் கடைசியாக படித்து முடித்தீர்கள் என்று கேட்டால் பொருத்தமாயிருக்கும். புத்தகத்தை எடுத்து விட்டால் அதை முடிக்கும் வரை வேறு வேலை ஓடாது. கடைசியாகப் படித்தது சுஜாதா நினைவுப் புனைவு 2009 - பரிசு பெற்றக் கதைகள். கடைசியாக படித்தவற்றில் பிடித்த புத்தகம் - தேவனின் சிறுகதைத் தொகுப்பு மாலதி.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
முன்பு அடிக்கடி மாற்றுவேன். இருபது நிமிடத்துக்கொருமுறை மாற்றுவதற்கு தனி ஸாஃப்ட்வேரே வைத்திருந்தேன். இப்பொழுதெல்லாம் மாற்றுவதேயில்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
அழகிய வெட்க மௌனம். ஆளில்லா கொடூர மௌனம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இந்திய தேசத் தலைநகரம்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
அப்படியொன்றும் எனக்கென்று தனித்திறமை கிடையாது. உங்களுக்கு இருக்கும் திறமைகளில் ஏதாவது ஒன்று வேண்டுமானால் இருக்கலாம். எனக்கே எனக்கான தனியான திறமை ஒன்றும் கிடையாது.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடி முழுகிப் போய்விடுமா? மேலும் அப்படிப்பட்ட விஷயங்கள், எனக்கு அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கின்றன.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சோம்பேறித்தனம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
ஒரு இடத்துக்கு திரும்பத் திரும்பப் சுற்றுலா போவது பிடிக்காது. புதிய புதிய இடங்களுக்கு செல்லவே ஆசை, அவை சுற்றுலாத் தலமாக(தலம் சரியா? தளம் சரியா?) இல்லாவிட்டால் கூட. (குற்றாலத்தை சுற்றுலாத் தலப் பட்டியலில் நான் சேர்க்க மாட்டேன்.)

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்படி வேணா இருக்க ஆசை.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
சொல்ல முடியாத காரியம்.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
நிஜமாக சொல்ல வேண்டுமென்றால் - புரியவில்லை!!!

கடைசியாக இதைத் தொடர நான் அழைக்க விரும்புவது இரா. வசந்தகுமார்(ஏற்கனவே சொல்லி வச்சாச்சு!!). வசந்தகுமாரும் நானும் புரட்டிப் போட்ட படைப்புகள் குழுவில் இருந்தாலும், நான் அவரது எழுத்துக்களை படிக்கத் தொடங்கியது சிறில் அலெக்ஸ் நடத்திய போட்டியின் போதுதான். மனிதர் அந்தப் போட்டிக்கு மட்டுமே கிட்டத்தட்ட 15 கதைகளை ஒரு மாத காலத்துக்குள் எழுதி அயரடித்தார். அதற்கப்புறம் ஃபோன் மூலம் பரிச்சயம். சிறுகதை என்பதின் நெளிவு சுளிவுகளை நன்கறிந்தவர் என்பது இவரது கதைகளைப் படித்தாலே புரியும். சமீபத்தில் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ள அவரை 32ஐ தொடர்ந்து அடித்து ஆட அழைக்கிறேன்.

Wednesday, June 3, 2009

தேவனும் சுஜாதாவும்

தேவன் எப்பொழுதுமே எனது ஃபெவரைட். கிட்டத்தட்ட (கிட்டத்தட்டதான்) அவரின் புத்தகமாக வெளிவந்த அனைத்து சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன். இன்று தேவனின் ஒரு சிறுகதை தொகுப்பான மாலதி(கிழக்குப் பதிப்பகம்) புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. அதில் இரண்டு சிறுகதைகள் தவிர மற்ற அனைத்தும் நான் இதுவரை வாசிக்காதவையே! அதில் ஒரே ஒரு கதையின் சாராம்சத்தை மட்டும் இங்கே விவரிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்தக் கதையின் பெயர் விசித்திர நகரம்.

ஒரு பெரிய இரும்பு வியாபாரி சாகக் கிடக்கிறார். அவரை ஒரு இன்சூரன்ஸ் ஏஜண்ட் போல் இருக்கும் ஒரு வாலிபன் வந்து சந்தித்து, அவர் வியாபாரம் ஆரம்பித்த விவரம் குறித்து விசாரிக்கிறான். அந்த சம்பாஷனையில், அவர் தனது நண்பனின் பணத்தை முதலீடு செய்ததும், பின்னர் அந்த நண்பனையே ஏமாற்றி துரத்திவிடுவதும், அவன் சோற்றுக்கு வழியில்லாமல் செத்துப் போனதும், அவன் குடும்பமும் நசிந்து இறந்து போனதும் நமக்குத் தெரிய வருகிறது. அடுத்த சீனில், அந்த பெரிய மனிதர், ஒரு பெரிய நகரத்தில் ரயிலிலிருந்து இறங்குகிறார். அந்த இன்சூரன்ஸ் ஏஜண்ட் அவரை வழிகாட்டி அழைத்துப் போகிறான். அந்த நகரத்தின் வனப்புகளை பார்த்து வியந்தவாறே அந்த பெரிய மனிதர் போய்க் கொண்டிருக்கிறார். அங்கே, பட்டணத்தில் இருக்கும் தனது பங்களாவைப் போலவே ஒரு பங்களா இருக்க, அது தன்னுடையதுதான் என்ற மயக்கத்தில் உள்ளே நுழைய முயல, அந்த ஏஜண்ட் அவரைத் தடுக்கிறான். பெயர்ப் பலகையைக் காட்டுகிறான். அதில், அவர் தொழிலுக்கு முதல் போட்ட, ஏமாற்றப்பட்ட அந்த நண்பனின் பெயர் இருக்கிறது. அப்பொழுதுதான் அந்த புது நகரம் என்பது மறு உலகம் என்பது வாசிக்கும் நமக்கு உணர்த்தப்படுகிறது. பூவுலகில், அவர் நண்பன் முதல் போட்டத் தொழிலில் அவர் பணம் சேர்க்க சேர்க்க, இங்கே அதே அளவுக்கு செல்வம் அந்த நண்பன் கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது. அப்புறம் கெட்டவனுக்குத் தண்டனை என்னும் நீதிப்படி அவருக்கு ஒரு கச்சடாவான ஓலை கூட இல்லாக குடிசையே அவர் தங்க வேண்டிய இடம் என்பதாகக் கதை முடிகிறது.

சரி, இப்பொழுது இந்தக் கதைச் சுருக்கத்தை படித்தபின் உங்களுக்கு வேறு ஏதாவது/யாராவது நினைவுக்கு வருகிறதா/றார்களா?

.



.


.


.


.


.

.

.

.

.

.

எனக்கு சுஜாதாவின் வாசல் கதையும், தர்மு மாமா கதையும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. ஓகே, ஓகே, ஓகே. சுஜாதா காப்பியடித்தார் என்றா சொல்கிறாய், என்று நீங்கள் என்னுடன் சண்டை பிடிக்க கிளம்புமுன், ஒரு சில வரிகள். இரண்டு பேரின் கதைக் களங்களும் வேறு வேறுதான். அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் சுஜாதாவின் தர்மு மாமா கதையின் கான்செப்ட் தனி, வாசல் கதையின் கான்செப்ட் தனி. தேவனின் இந்த ஒரே கதையில் இந்த இரு கான்செப்டுகளும் இணைந்தே வருகின்றன. சுஜாதாவின் கதைகளில் கிடைத்த அந்த ஒரு கிரிஸ்ப்னஸ் தேவனின் கதையில் கிடைக்கவில்லைதான்.

இந்த மூன்று கதைகளையும் படித்தவர்கள் தங்கள் கருத்துக்களையும் கூறலாம்.

Tuesday, October 21, 2008

அறிபுனைக் போட்டி முடிவு - ஒரு அதிருப்தி - அறிபுனை எழுத்தாளர்களுக்கு எச்சரிக்கை

நான் இதை எழுதியிருக்கக் கூடாது. இருந்தாலும் மனம் கேட்கவில்லை. சிறில் அலெக்ஸ் நடத்திய அறிபுனைக் கதைகள் போட்டி முடிவுகள் ஒரு வழியாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வசந்தகுமார், ஸ்ரீதர் நாராயணன், சேவியர், மூவரும் பரிசுக்குத் தகுதியானவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முதல் பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் கதைதான் ரொம்பவே நெருடுகிறது. போட்டி நடத்தப்பட்டது அறிவியல் புனைக்கதைகளுக்கு. ஆனால் முதல் பரிசு பெற்ற கதை, அந்த வகையில் அடங்காது என்பது எனது கருத்து. அது ஒரு வித்தியாசமான கதையே தவிர, அறிவியல் புனைவு அல்ல. வசந்தகுமார், இந்த போட்டிக்காக கிட்டத்தட்ட 15 கதைகள் எழுதிய நிலையில், அவற்றில் ஒரு அறிவியல் புனைவு கூடவா பரிசுக்கு சிக்கவில்லை?

ஸ்ரீதரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை கூட, போட்டிக்கு வந்த அவரது மற்ற கதைகளை விட சில படிகள் குறைவான கதைதான் என்பது எனது கருத்து. ஆனால் ஒவ்வொருவர் ரசனையும் வேறு விதமாக இருக்கலாம் என்பதாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அறிவியல் புனைவு கூறுக்குள் அடங்குவதாக இருப்பதாலும், இந்த விஷயத்தை விட்டு விடலாம்.

பரிசு கொடுப்பது, மேலும் அது போன்ற ஆக்கங்கள் தொடர்ந்து வர ஊக்குவிப்பதற்குத்தான். அதனால், பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவர்கள் எழுதிய மற்ற சிறந்த கதைகளை விட, இது போன்ற கதைகளை தொடர்ந்து எழுதினால்தான் அவை அறிபுனை கதைகள் என்று ஏற்றுக் கொள்ளப்படும், என்று மனதளவில் நினைக்கும் அபாயம் நிறையவே இருக்கிறது. போட்டிக்கு எழுதிய மற்ற எழுத்தாளர்களும், அறிவியல் கூறுகளோடு கதை எழுதினால், அவை ஏற்றுக் கொள்ளப்படாது என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால், அறிபுனை எழுத்தாளர்களே!! இந்தப் போட்டியின் முடிவு உங்களது எண்ணங்களையும், ஆக்கங்களையும் பாதிக்காமல், தொடர்ந்து அறிவியல் கூறுகள் கொண்ட அறிபுனை கதைகளையும் எழுதி, தமிழில் அந்தக் கூறு மேன்மேலும் வளரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!

எனது இந்த நிலையை முதல் பரிசு பெற்ற நண்பர் இரா.வசந்த குமார் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்!!

Wednesday, October 15, 2008

மேலும் ஒரு மீம்

இந்த மீம் தொடருக்கு யாராவது அழைத்தால் நாசூக்காக மறுத்து விடவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். நர்சிம் செல்லில் அழைத்தபொழுதுகூட "இல்லை. முடியாது" என்ற வார்த்தைகள் தொண்டை வரை வந்து விட்டது. ஆனால் அவர் குரலில் என்ன மாயம் இருந்ததோ தெரியவில்லை, "ஓ! போட்டுறலாம்" என்று சொல்லிவிட்டேன். அதனால் இதைப் படித்துவிட்டு யாராவது திட்டவேண்டும் என்றால் நர்சிம்மையே திட்டவும். எல்லாப் பழியும் நர்சிம்முக்கே!!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
சிறு வயதில் தியேட்டரில் பார்த்த படம் எவையெவையென்று நினைவில் இல்லை. வீட்டில் விசிஆரில், கர்ணன் படம் அதிகதடவை பார்த்தது நினைவிலிருக்கிறது. அதில் வரும் போர்க்களக் காட்சிகள் அந்த வயதில் மிகவும் கவர்ந்தது.
வீட்டோடு அல்லாமல் தனியாக திரையரங்கில் பார்த்த முதல் படம் பம்பாய். அப்புறம் வயதுக்கு வந்தபின் சில சொல்லக்கூடாத படங்கள்...

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா. ஆங்கில படத் தழுவலாயிருந்தாலும் கூட, அதை நல்ல முறையிலேயா வெங்கட் பிரபு, தமிழ் ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார் என்பது எனது கருத்து. ஆனால் பாடல்கள் வேஸ்ட்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஏதோ ஒரு டிவியில் ஊமை விழிகள். அது எடுக்கப் பட்ட காலகட்டத்தில், இந்தப் படத்தின் ஒளிப்பதிவு நன்றாயிருக்கிறது என்று தோன்றியது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அப்படி எதுவும் தாக்கி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதாக நினைவில்லை. பொதுவாக மணிரத்னம் படங்கள் கொஞ்சம் என்னை அசைத்துப் பார்க்கும். அவ்வளவுதான்.

5.அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நிறைய பேர் சொல்லி விட்டதைப்போல், பாட்ஷா பட வெற்றிவிழா சம்பவத்துக்குப் பின், ரஜினி ஜெவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததுதான். ஏனென்றால் எம்ஜிஆர் அரசியல் பிரவேசத்தின் போது நான் பிறக்கவில்லை.
5-ஆ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
கணிணி வரைகலைதான். முன்பே ராஜபார்வையிலிருந்து கமலும், அஞ்சலியிலிருந்து மணிரத்னமும்(அதற்கு முன்பு ஏதாவது இருக்கிறதா?) கிராஃபிக்ஸை தங்கள் படங்களில் உபயோசித்திருந்தாலும், ஷங்கர்தான் அதை சரியான படி தமிழ்திரையுலகினருக்கு அறிமுகப்படுத்தி மார்க்கெட் செய்தார். அது தமிழில் இன்னும் பெர்ஃபெக்ஷன் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
முன்பு குமுதம், விகடன், வாரமலரிலிருந்து... சினிக்கூத்து வரை விடாமல் வாசித்திருக்கிறேன். இப்பொழுது வலைப்பதிவுகளில் படிப்பதோடு சரி.

7.தமிழ் சினிமா இசை?
ரஹ்மான் வரும் முன்பு வரை திரை இசையில் அவ்வளவாக ஆர்வம் இருந்தது கிடையாது(அப்ப கர்நாடக இசையில் ஆர்வம் இருந்ததான்னெல்லாம் கேட்கக் கூடாது). அதற்கப்புறம் ரஹ்மானின் தீவிர விசிறி. இப்பொழுது இளையராஜா, வித்யாசாகர், ஹாரிஸ், அவ்வப்போது யுவன் என்று ரசிக்க முடிகிறது. பழைய பாடல்களை(டி.எம்.எஸ், சீர்காழி,ஏ.எம்.ராஜா, கண்டசாலா, PBS) சிறுவயதில் வானொலி மூலம் கேட்டுப் பழகியதால், எப்பொழுதுமே அவை எனது ஃபேவரைட்.(இசை பற்றி மட்டும் கேட்டதால் பாடல்கள்/வரிகள் சாய்ஸில் விடப்படுகிறது).

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்திய சினிமாவில் இந்தி சினிமாக்கள் பலவும், தெலுங்கு படங்கள சில பலவும் மட்டும் பார்த்திருக்கிறேன். உலக சினிமாவில் ஹாலிவுட்டையும், ஜாக்கி சான், ஜெட்லி தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை. பொதுவாக சைன்ஸ் ஃபிக்ஷன் வகையறாக்கள் பிடிக்கும், ஒரு சில பீரியட் படங்களும்!! பாதித்த சினிமா என்பதை தவிர்த்து, பார்த்து வியந்த படங்கள் பல இருக்கின்றன. சார்லியின் ”தி கிரேட் டிக்டேட்டர்”ல் இருந்து, ராபர்ட் ஸெம்மிக்ஸின் ”பேக் டூ தி ஃபியூச்சர்” வழியாக, வசௌஸ்கி சகோதரர்களின் ”தி மேட்ரிக்ஸ்” வரை ஹாலிவுட்டின் தொழில்நுட்ப ரீதியான அசத்தல்களை கண்டு பிரமித்திருக்கிறேன்.

9. அ) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
இது ஒரு நல்ல்ல்ல கேள்வி!! அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. சுஜாதாவின் கீழ் ஒரு பிராஜக்டில் சில காலம்(ஒரு மாதம்) பணியாற்றிய பொழுது, அவர் அந்நியன் கதையை எழுதி முடித்து விட்டிருந்தார். அது பற்றி அவரின் உதவியாளரிடம் கதையின் ஒன்லைன் என்ன என்று கேட்ட அளவுக்கு மட்டுமே எனது நேரடித்(?!) தொடர்பு.
9. ஆ) பிடித்ததா?
ஓ! ஒன்லைன் என்ன என்று கேட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அது எனக்கே தெரியாது என்று அந்த உதவியாளர் சொன்னதுதான் பிடிக்கவில்லை.
9. இ) அதை மீண்டும் செய்வீர்களா?
இப்பதான் எனக்கு முழுப்படமும் தெரியுமே. அப்புறம் எதுக்கு மறுபடியும் ஒன்லைன் கேட்கனும்?!
9. ஈ) தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தமிழ் இயக்குநர்களுக்கு அவர்கள் இயக்கும் படங்களின் ஒன்லைன் சரியாக புரிந்தாலே தமிழ் சினிமா இன்னும் மேம்பட்டு விடும் என்பது எனது கருத்து!

10. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
பெரிதாக ஒன்றும் நடந்து விடாது என்றே நினைக்கிறேன். பல பேர் கொஞ்ச நாள் பேஸ்த் அடித்தாற் போல் இருப்பார்கள். அப்புறம் வேறு ஏதாவது பொழுதுபோக்கை நாடிப் போய் விடுவார்கள். அந்த பொழுதுபோக்கை தருவதற்குரிய மீடியாவும் உருவாகிவிடும். ஒரு காலத்தில் புத்தகமும், தொடர்கதையும் படித்தவர்கள், தொலைக்காட்சி, மெகா சீரியல், இணையம் என்று மாறி விடவில்லையா?


கோர்த்து விடுவது

இது பற்றி யோசித்ததில் ஒரு பதிவே போடும் அளவுக்கு விஷயம் இருப்பதாகத் தோன்றியதால், தனிப்பதிவாக இட்டிருக்கிறேன். அதை இங்கே சொடுக்கி படித்துக் கொள்ளவும்.

Friday, September 12, 2008

தமிழ்மணம் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

சிறிது நேரத்திற்கு முன்பு, பாரிஸ் திவா, மங்களூர் சிவாவின் பெயரை வைத்து இட்டிருந்த அருவருப்பான பதிவின் தலைப்பை பார்க்க நேர்ந்தது. அதை எதிர்த்து இடப்பட்டிருந்த பின்னூட்டங்களின் புண்ணியத்திலேயே, ரொம்ப நேரம் தமிழ்மண முகப்பில் தெரிந்தது. இப்பொழுது அது நீக்கப்பட்டுவிட்டது, என்றாலும், செய்த தவறுக்கு பாரிஸ் திவா மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காத பட்சத்தில் தமிழ் மணம் ஏன் அவர் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது? மேலும அவர் பதிவில் பல புதிய படங்களின் வீடியோக்களையும்(முழுப் படம்) போட்டிருக்கிறார். இது திருட்டு வீடியோ குற்றமில்லையா? குறைந்த பட்ச நாகரிகமும் கிடையாது, குறைந்தபட்ச நேர்மையும் கிடையாதா?

Thursday, September 11, 2008

பிரபல பத்திரிக்கையின் தமிழார்வம்?!

தற்செயலாக "நாணயம் விகடன்" அட்டைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.
"ஐ போன்
என் 96
எது பெஸ்ட்?"
என்ற தலைப்பு கண்ணில் பட்டது. ஐ போன் தெரியும். அது என்ன "என் 96" என்று சில நிமிடம் தடுமாறினேன். அப்புறம் அது "N96" என்று புரிந்தது. அடடே, பரவாயில்லையே! தமிழார்வம் ஓவரா இருக்குதே, என்று எண்ணியவாறே வலது புறம் பார்த்தபொழுது(அதே பக்கத்தில்)
"32 பக்க
L.K.G. இணைப்பு
கிரெடிட் கார்டு"
என்று இன்னொரு தலைப்பு. "L.K.G"யை "எல்.கே.ஜி" என்று எழுதினால்கூட எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய அளவில் அந்த வார்த்தை நமக்குத் தெரியும். அதை "LKG" என்றே போட்டிருக்கிறார்கள். ஆனால் N96ஐ "என் 96" என்று போட்டால் எத்தனை பேருக்கு சட்டென்று புரியும். தமிழார்வம் ஓவர்னா LKGஐயும் "எல்.கே.ஜி"னே போட்டிருக்கலாமில்லையா? ஸோ, தமிழார்வம் சுத்தமாயில்லை. அப்புறம் என்ன "என் 96" வாழுது? "N96"னு போட்டா படிக்கிறவனுக்காவது புரியுமில்ல? தமிழார்வம் ஃபுல்லா அரிச்சு போச்சுங்க!!!

Monday, September 8, 2008

கூகிள் க்ரோம் - தமிழ் தட்டச்ச முடியவில்லை

கூகிள் க்ரோமில் சில வசதிகள் இருந்தாலும், பல குறைபாடுகள் இருக்கின்றன. பீட்டா வெர்ஷன் என்பதால் பொறுக்கலாம். நான்கைந்து Tabகளுக்கு மேல் திறந்தால் தொங்க ஆரம்பித்து விடுகிறது. கூகிளின் தளங்களிலேயே கூட சிலது சரியாக திறக்க மாட்டேன்கிறது. முக்கியமாக கூகிளார், யூனிகோடை எப்படி ஹாண்டில் செய்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமாயிருக்கிறது.

நான் தமிழில் தட்டச்ச NHM உபயோகிக்கிறேன். யூனிகோடு தமிழில், மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களில் அகர வரிசை தவிர மற்றவைகளும், இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களின் கூட்டு எழுத்துக்கள். உதாரணத்திற்கு, க் என்பது "க" என்ற எழுத்தும், புள்ளி என்ற எழுத்தும் சேர்ந்த கூட்டெழுத்து. அதுபோல "ஜே" என்பது "ஜ" மற்றும் "ஏ" எழுத்துக்களின் கூட்டெழுத்து. நமது தட்டச்சு மென்பொருள்கள் எல்லாம், இதை மனதில் வைத்தே வடிவமைக்கப் பட்டவை. ஆனால் க்ரோம், இந்த கூட்டெழுத்துக்களை ஒரே எழுத்தாக பாவிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

சோதித்துப் பார்க்க, ஐ.இயிலோ, ஃபயர் ஃபாக்ஸிலோ ஏதாவது ஒரு தளத்தை(தட்டச்சுவதற்கு உகந்ததாக) திறக்கவும். இப்பொழுது அதில் "க்"என்றை எழுத்தை தட்டச்சுங்கள். பின் பேக் ஸ்பேஸை(Back Space) அழுத்திப் பாருங்கள். "க்" என்பது "க"வாகிவிடும். மேலும் ஒரு முறை பேக் ஸ்பேஸை அழுத்தினால்தான் முழு எழுத்தும் மறையும்.

ஆனால் அதே தளத்தை க்ரோமில் திறந்து, "க்" அடித்து, பேக் ஸ்பேஸை(Back Space) அழுத்திப் பாருங்கள். முதல்முறையே முழு எழுத்தும் அழிந்து விடும். நமது தட்டச்சு செயலிகள் சரியாக க்ரோமில் செயல்படாததற்க்கு காரணம் இதுதான்.

நமது செயலிகள், நாம் தட்டச்சும் பொழுது, நமக்குத் தெரியாமலேயே, இந்த பேக் ஸ்பேஸை பல சமயங்களில் உபயோகிக்கின்றன. நீஙகள் ரோமனைஸ்டு முறையில் தட்டச்சுகிறீர்களென்றால், "க" என்று எழுத "k"யை முதலிலும், "a"யை அடுத்தும் அழுத்துகிறீர்கள். உங்கள் செயலி என்ன செய்கிறது? நீங்கள் "k"யை அடித்ததும் "க்", அதாவது "க"+புள்ளிக்கான குறீயீடுகளை ஸ்கீரீனில் கொட்டி விடுகிறது. அடுத்ததாக "a"யை அழுத்துகிறீகள். இது உயிரெழுத்து. அதனால் முந்தின எழுத்து மெய்யெழுத்தா என்று பார்த்தால் ஆமாம் மெய்யெழுத்து. அதனால், இதை அந்த மெய்யுடன் கலந்து உயிர்மெய்யாக்க வேண்டும். அதாவது மெய்யெழுத்திலுள்ள புள்ளியை நீக்க வேண்டும். இதற்கு சுலபமான வழி ஒரு பேக் ஸ்பேஸுக்கான(Back Space) ஆணையை அனுப்புவதுதான். அதுவே நமது செயலிகளாலும் செய்யப்படுகிறது.

ஆனால் க்ரோம் இப்பொழுது இந்த யூனிகோடு எழுத்துக்களை ஒரே எழுத்தாக பாவிப்பதால், புள்ளி மட்டும் நீங்குவதற்கு பதிலாக முழு எழுத்தும் அழிந்து விடுகிறது. கூகிள்காரர்கள் எந்த ஸ்டான்டர்டை பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.

இது எனது சந்தேகம் மட்டுமே. பிரச்சினை வேறு மாதிரியும் இருக்கலாம்.

கடைசியாக வந்த தகவல் : NHM புதிய வெர்ஷன் க்ரோமில் வேலை செய்கிறது. இந்த கடைசித் தகவல் அதன் மூலம் க்ரோமில் தட்டச்சப்பட்டது. தகவல் கொடுத்த பாலாவுக்கும், செயலி எழுதிய நாகராஜ்ஜுக்கும் நன்றி!!!

Sunday, April 13, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் எனது இனிய மிழ் புத்தாண்டு வாழ்த்துக்ள்

Thursday, January 31, 2008

புகைப்பதை நிறுத்துவது எப்படி?


மார்க் ட்வெய்ன் ஒரு முறை சொன்னாராம், "புகைப்பதை நிறுத்துவதென்பது எளிதான விஷயம். நான் 1000 தடவைகள் அந்த மாதிரி நிறுத்தியிருக்கிறேன்" என்று.

புகைப்பதை நிறுத்துவதற்கு எளிதான வழியென்று Cold Turkey முறை என்று ஒன்று சொல்கிறார்கள். முதலில் புகைப்பதை நிறுத்துவதற்கான ஒரு நாளை தேர்ந்தெடுக்கவும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தள்ளி ஒரு நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம் என்கிறார்கள். பிறகு அந்த நாளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக புகைக்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டே சென்று, குறிப்பிட்ட நாளில் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும். ஆனால் இது ஆகிற வேலையாக எனக்குப் படவில்லை.

ஒரு கணவனிடம் மனைவி ஒருத்தி முறையிட்டாளாம், "என்னங்க, என் தம்பி சந்நியாசம் வாங்கப் போகிறானாம். கொஞ்சம் கொஞ்சமா உலக ஆசைகளையெல்லாம் ஒன்னு ஒன்னா விட்டுகிட்டிருக்கான்."

அதற்கு கணவன் "கவலைப்படாதே! உன் தம்பி கண்டிப்பா சந்நியாசியா ஆக மாட்டான்" என்று ஆறுதல் சொன்னானாம்.

உடனே மனைவி, "அதெப்படி உறுதியா சொல்றீங்க?"

கணவன், "இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சந்நியாசி ஆக முடியாது. அதனால உன் தம்பி சந்நியாசி ஆக மாட்டான்" என்று சொன்னான்.

அதற்கு மனைவி "பின்னே கொஞ்சம் கொஞ்சமா ஆகாம, எப்படி சந்நியாசி ஆவாங்க?" என்று கேட்டாளாம்.

உடனே கணவன் "இப்படித்தான்" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சந்நியாசியாகி போய் விட்டானாம்.

புகைப்பது, குடிப்பது போன்றவைகளையும் இப்படித்தான் டக்கென்று ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து ஒரேயடியாக விட்டு விட வேண்டும். ஆனால் இப்படி நிறுத்துவதற்கு, சந்நியாசம் வாங்க எவ்வளவு மனப்பக்குவம் தேவையோ அந்தளவுக்கு மனவலிமை தேவை.

சரி, "டக்"

நிறுத்தியாயிற்று. 10 நிமிஷம் ஆயிற்று. 30 நிமிஷம். ஒரு மணி நேரம் ஆயிற்று. அடுத்த தம் போட வேண்டிய நேரம். "தம் அடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாலும் அந்த தம் அடிக்க வேண்டும் போல் இருக்கும் உணர்வு வரும்பொழுது என்ன செய்வது?"

அந்த மாதிரி உணர்வு ஏற்படும் நேரத்தில், யாரிடமாவது பேசுங்கள், சிறிது காலாற நடை போடுங்கள்(அப்படியே நடந்து பெட்டிக்கடைக்கு போய் விடாதீர்கள்!), தண்ணீர் குடித்து பாருங்கள். செய்யும் வேலையில்/வேறு ஏதாவது பொழுதுபோக்கில் முழு கவனத்தையும் செலுத்த முயலுங்கள்.

"தினசரி சாப்பிட்டவுடன் ஒரு தம் அடித்து பழகியாயிற்று. இப்பொழுது திடீரென்று எப்படி அதை மாற்றுவது?"

டோட்டலாக தம் அடிப்பதுடன் சம்பந்தப்பட்ட அந்த பழக்க முறையையே மாற்றுங்கள். உதாரணத்திற்கு, சாப்பிட்டவுடன் தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமாக சாப்பிடும் இடத்தில் சாப்பிடாமல் வேறு இடத்தில் சாப்பிடுங்கள். காபி குடித்தவுடன் தம் அடிக்க வேண்டுமா? காபி குடிக்கும் நேரத்தில் டீ குடித்து பழகுங்கள். காலையில் ஆஃபீஸ் வரும் வழியில் நின்று ஒரு தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமான வழியை மாற்றி புது வழியில் வர முயலுங்கள். இது போல் தம் அடிக்கும் செயலுடன் சம்பந்தப்பட்ட மற்ற பழக்க முறைகளில் இருக்கும் ஒழுங்கு முறைகளை உடைத்துப் போடுங்கள்.

"நான் இது போல் பல தடவைகள் தம்மை விட முயன்றிருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் முடியவில்லையே. என்ன செய்ய?"

திரும்பவும் முயலுவோம். தவறில்லை. சென்ற தடவைகளில் தம்மை விட முயன்ற பொழுது என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை ஞாபகப்படுத்தி, அவற்றை தவிர்க்க முயலுங்கள்.

முக்கியமான தேவை மனவலிமை. முதல் மூன்று நாட்கள் தாண்டுவது மிகக் கடினம். அதற்குபின் கொஞ்சம் பழகிவிடும். தொடர்ந்து மூன்று மாதம் இருந்து விட்டால், அப்புறம் சுத்தமாக நினைவையே விட்டு விடலாம்.

Monday, December 24, 2007

வா, வாங்க, வாங்களேன்


நேற்று கிழக்கு பதிப்பகத்தில் நடந்த சந்திப்பில் அகராதி, Spell Check பற்றி பேச்சு வந்தபொழுது, "வா" என்ற சொல்லுக்கு மட்டும் கிட்டத்தட்ட 300 வடிவங்கள் இருப்பதாக சொன்னார்கள்(உதாரணத்திற்குத்தான் சொன்னார்கள்!). அதாவது வாங்க, வருகிறேன், வந்தாய் போன்ற சொற்களெல்லாம் "வா" என்ற வினைச் சொல்லின் வடிவங்களே. சந்திப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும்தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. 300 வடிவங்கள் என்பது ரொம்பவும் அதிகப்படியாக எனக்கு தோன்றுகிறது. 100 வடிவங்கள் இருந்தாலே அதிகம்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. எதற்கு வீண் சந்தேகம்?
உங்களுக்குத் தெரிந்த "வா" வடிவ சொற்களையெல்லாம் பட்டியலிட்டு சொல்லுங்களேன். சோதனை செய்து பார்த்து விடுவோம்!!

Monday, November 26, 2007

கவிதை மாதிரி...

உன்னைப் பற்றி நினைப்பதே
முட்டாள்த் தனம், புரிகிறது
ஆனாலும் எனக்கு நினைப்பதற்கு
ஏதாவ தொன்று தேவையிருக்கிறதே!
என்ன செய்யச் சொல்கிறாய்?

Sunday, November 25, 2007

தினமணிக் கதிரில் நிலாரசிகன்

இன்றைக்கு தினமணிக் கதிரில், நண்பர் நிலாரசிகனின் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), அவருடைய வலைபதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள். நிலாரசிகனின் எழுத்துக்கள் அச்சுப் பிரசுரம் ஆவது இது முதல் முறை அல்லவென்றாலும், கதை என்ற கூறில், இதுவே அவரின் முதல் அச்சுப் பிரசுரம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!


பி.கு.: ஏனோ தினமணியின் இணைய தளத்தில் அந்தப் பக்கம் இல்லை.

Tuesday, October 30, 2007

கவிதை மாதிரி...

பிணமான பின்னும்
'கியூ'வில் காத்திருக்கிறேன்,
எரிவதற்காக -
எலெக்ட்ரிக் சிதையில்.

Tuesday, October 23, 2007

விகடன் செய்ததும் நியாயமில்லை

ஞானி எழுதியது சரியா இல்லையா என்பது ஒரு புறம். ஆனால் விகடன் செய்தது சிறிதும் நியாயமில்லை.

ஒரு கட்டுரை பிரசுரத்திற்கு போகும் முன்பே, அது தொடர் கட்டுரையாயிருந்தால் கூட, ஆசிரியர் குழுவில் யாருமே அதை படிக்காமாலா இருந்திருப்பார்கள். அப்பொழுது ஞானியின் எழுத்தில் எந்த தவறும் காணாத விகடன், கட்டுரை பிரசுரமாகி எதிர்ப்பு கிளம்பியதும், தனக்கு அதில் எந்த சம்பந்தமுமே இல்லாதது போல் ஞானியை மட்டும் பலி வாங்கியது என்ன நியாயம்.

ஒன்று முதலிலேயே ஞானியின் அந்தக் கட்டுரையை, விகடன் ஆசிரியர் குழு நிராகரித்திருக்க வேண்டும். ஆசிரியர் குழுவில் யாருமே அந்தக் கட்டுரையை பிரசுரத்திற்கு முன் படிக்கவில்லை என்றால், இவர்கள் ஆசிரியர் குழு என்று ஒன்று வைத்திருப்பதே வீண்.

இல்லை, ஆசிரியர் குழுவின் ஒப்புதலோடே அந்தக் கட்டுரை பிரசுரமாகியிருந்தால், குறிப்பிட்ட கட்டுரை எழுதியதற்காக ஞானியின் தொடரை நிறுத்தியிருக்க கூடாது. ஏனென்றால் அதை பிரசுரிக்கும் முடிவை எடுத்ததே அவர்கள்தானே.

ஆக, விகடனின் நேர்மை(?) மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

நீதி :- விகடனில் ஏதாவது தொடர் எழுதிகொண்டிருக்கும்/எழுதப்போகும் எழுத்தாளர்களே, ஜாக்கிரதையாக இருக்கவும்!!!